இருதய நோய் குணமாக



🌷இருதய நோய் குணமாக







🌼உங்கள் இதயத்தை பாதுகாக்க குடிநீர் மருந்து




🌿இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.




☘️இதய நோயில் மிகவும் முக்கியமானது இதய இரத்த நாளத்தில் பொதுவாகத் தென்படும் கொழுப்புப் படலம்.




🪷இதன் காரணமாக நாளடைவில் இதய நாள இரத்தக் குழாய் ("கரோனரி ஆர்ட்டரி') முழுவதுமாக அடைபட்டு மாரடைப்பு வருவதற்குக் காரணமாகிறது. இதை சரிசெய்ய




🌷தேவையான பொருட்கள்




🪸ஆவாரம் பூ – 50 கிராம்




🪸தாமரைப் பூ – 50 கிராம்




🪸ரோஜாப் பூ – 50 கிராம்




🪸செம்பருத்திப் பூ - 50கிராம்




🪸சுக்கு – 10 கிராம்




🪸மிளகு – 10 கிராம்




🪸திப்பிலி – 10 கிராம்




🪸ஏலக்காய் – 10 கிராம்




🍃ஆகியவற்றை எடுத்து நன்கு காயவைத்து ஒன்றிரண்டாய் பொடித்து வைத்துக் கொள்ளவும்.




🌿இதில் 10 கிராம் எடுத்து 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பாதியாகவற்ற வைத்து அதிகாலை மற்றும் மாலை இருவேளையும் 50மிலி அளவு அருந்தி வர,





🌱 இரத்த அழுத்தம் போன்ற குறைபாடுகள் சரியாகும்.




🌱 இதய நோய்கள் நீங்கும்.




🌱 நல்ல தூக்கம் வரும்...

விளக்கெண்ணையின் பயன்கள்...

 விளக்கெண்ணை எண்ணெயில் ரிசினோலியிக் ஆசிட் அதிகம் உள்ளது, 


🫐இந்த ஆசிட் ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரிசெய்யக்கூடிய ஒன்று.


🌳எனவே இத்தகைய எண்ணெயை அழகு பராமரிப்பில் பயன்படுத்தினால், சருமம் அழகாவதோடு, கூந்தலும் நன்கு பொலிவோடு காணப்படும். 


🪷தினமும் கைகளுக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், கைகளில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக மறைந்து விடும். 


🌴மேலும் தினமும் இரவில் படுக்கும் முன் நகங்களில் விளக்கெண்ணெயை வைத்து வந்தால், நகங்கள் நன்கு பொலிவோடு அழகாக வறட்சியின்றி காணப்படும். 


🥦விளக்கெண்ணெய்யை முகத்திற்கு தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும் சருமம் ஈரப்பசையுடன் இருக்கும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வரலாம். 


🌱குதிகால வெடிப்புக்கள் இருந்தால், தினமும் விளக்கெண்ணெய் தடவி வர, குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி, வெடிப்புக்களும் விரைவில் காணாமல் போய்விடும். 


🍁கூந்தல் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தி வாரத்திற்கு ஒரு முறை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சீவக்காய் போட்டு குளித்தால், கூந்தல் நன்கு வளர்ச்சியடையும். 


🍀வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சியைப் போக்குவதற்கு, விளக்கெண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் மென்மையாவதோடு, வறட்சியின்றி பொலிவோடு காணப்படும். 


🪸இரண்டு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில், 15 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதம் மூலம் சருமத்தில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை படிப்படியாக போக்கலாம். 


🌺சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். அவர்கள் விளக்கெண்ணெய் கொண்டு சருமத்தை தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், தளர்ந்து காணப்படும் சருமம் இறுக்கமடைந்து, இளமை தோற்றத்தில் காணப்படும்.


☘️உதடு கருமையை போக்க விளக்கெண்ணெயுடன் சிறிது நீர் சேர்த்து உள்ளங்கையில் தேய்த்தால் வெண்மையாக க்ரீம் போன்று வரும். அதனை உதட்டில் தினமும் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.


  🌿சரும துளைகளில் அடைப்பட்டிருக்கும் தூசு, இறந்த செல்களை வெளியேற்றும். 


🍃விளக்கெண்ணெயை சிறிது பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வர சருமத்தில் உள்ள அழுக்கு வெளியேறும்.


🌱தினமும் இரவில் ஐ ப்ரோ பென்சிலால் விளக்கெண்ணெயை தொட்டு புருவம் வரைந்து வந்தால், அதே போல் புருவம் அடர்த்தியாக வளரும்.

முருங்கை பட்டை மருத்துவ பலன்கள்

 முருங்கை பட்டையானது, முழுக்க முழுக்க வைத்தியத்துக்கு பயன்படுத்தக்கூடியது.. 


🦋பெரும்பாலும், முருங்கை பட்டையை உலர்த்தி பொடி செய்து வைத்து கொள்வார்கள். தலைவலி, காய்ச்சலுக்கு, மூட்டுவலி போன்றவைகளுக்கு பட்டை பொடி பலனை தரும். 


🍃நரம்புக் கோளாறு இருப்பவர்கள், முருங்கை பட்டையை வாரத்தில் ஒருநாளாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.


☘️முருங்கை வேர் + பட்டை இரண்டுமே பல்வேறு நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.. முருங்கைப் பட்டையுடன் கடுகு சேர்த்து மையாக அரைத்து, கீல்வாதம் உள்ள இடத்தில் பற்று போட்டு வந்தால் குணமாகும் 


🍁முருங்கைப் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் குப்பைமேனி இலைச்சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற சரும நோய்கள் உள்ள இடங்களில் பூசினால் முழுமையான குணம் கிடைக்கும். 


🌺அதேபோல, இந்த பட்டையை இடித்து வீக்கங்கள், கட்டிகள், புண்கள் மீது வைத்து கட்டினால், வீக்கம் குறையும்... கட்டியும் குறையும்.. 


🌿பட்டையின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டு, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.. இந்த தண்ணீர், பலவித பிரச்சனைகளையும் சரிசெய்யக்கூடியது..


🌱உள்ளுறுப்புகளை சீராக செயல்பட வைக்கிறது.. ரத்தத்தை சுத்திகரிக்க செய்கிறது.. அதனால், ரசம் அல்லது சூப் போல செய்து மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் பறந்துவிடும். ஜீரண சக்தியை அதிகரிக்க செய்யும்.. 


🪸இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.. வயிற்றில் புண் இருந்தாலும் ஆற்றிவிடும்..!

இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இணையசேவை இல்லாமல் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச தொகையை ₹200ல் இருந்து ₹500 ஆக அதிகரித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு.


Near Field Communication மூலம் இவ்வகை பணப்பரிமாற்றம் நடக்கிறது

தேர்வு கிடையாது பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு நிச்சயமாக பணி கிடைக்க வாய்ப்பு

அஞ்சல் துறையில் BPM, ABPM, DAKSEVAK (கிராமப்புற அஞ்சலகங்கள்) உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு, இம்மாதம் 23_ந்தேதிக்குள் Online ல் விண்ணப்பிக்க வேண்டும்.


பத்தாம் வகுப்பில் 470 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு நிச்சயமாக பணி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.


தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பணிகள் வழங்கப்படுகின்றது.


வாய்ப்புள்ள நமது பிள்ளைகளுக்கு வழி காட்டவும்.

அடிப்படை ஊதியம் BPM Rs.12000 & Rs.14500 (கிளை அஞ்சலக அலுவலர்) ABPM Rs.10000 & Rs.12000 (கிளை அஞ்சலக துணை அலுவலர்) & DAKSEVAK Rs.10000 & Rs.12000 (துணை அஞ்சலக உதவியாளர்.